Skip to main content

தமிழ் நாட்டின் தள வரலாறு - II

தமிழர்கள் குடியானவர்களாகவும் வேடுவர்களாகவும் இருந்து உள்ளனர். முருகன் வேட்டுவ கடவுள். முருகனை வணங்கியவர்கள் தங்களுக்கு என ஒரு மதம் வைத்திருந்தாகவும் கூறப்படுவது உண்டு. இவர்கள் பெரும்பாலும் மலை பகுதிகளில் வசித்தனர். குடியானவர்கள் அதாவது ஒரே இடத்தில தங்கள் வாழ்வை அமைத்து கொண்டவர்கள் - வேளாண் பெருமக்கள் இவர்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்திருக்க கூடும்.

வர்த்தக சமுகம் ஒன்றும் உருவாக தொடங்கியது இவர்கள் பொருள் தேடி பல தேசங்கள் பயணம் செய்தனர். நம் மொழியின் வார்த்தைகளும் பழமொழிகளும் இவை சொல்லும்.

அம்மாவாசை என்பது வணிக குலத்தின் திருநாள். இந்த நாளில் அவர்கள் கப்பல் பயணம் மேற்கொள்வர். காரணம் வருவது வளர்பிறை.
தாயின் வசம் பிள்ளையை ஒப்படைத்து செல்வதே அம்மா வாசை என்றும் சொல்வது உண்டு. இந்த வணிக மக்களின் பெருநகரம் பூம்புகார்.

தற்போது பூம்புகார் பெரிய அளவில் இல்லை. பூம்புகார் மட்டுமே நகரம் என்று அழைக்கப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. இந்த மண்ணில் வாழ்ந்த கண்ணகி பத்தினி வழிபாட்டின் அச்சாணி. தாய் வழி சமூகமான இந்த வணிக சமூகம் கண்ணகியை தங்கள்கடவுளாய் ஏற்றுகொண்டது.

இந்த பூம்புகார் நகரத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மண்ணின் வேறு நகரங்களுக்கு இடம் பேராதவர்கள் என்றும் அதனாலே இது புகார் என்று அழைக்க பட்டதாகவும் செய்திகள் உண்டு. இது ஒரு சோழர் கால நகரம். இதற்கென போர்கள் நடந்ததா எனதெரியவில்லை.

இந்த பூம்புகார் ஒரு கடற்கோளில் அழிந்து போனது. சிலப்பதிகாரம் இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் பதிவே. தமிழ் மண்ணில் முதன்முதலில் அரசர்கள் அல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் இந்த மண்ணை சார்ந்தவர்களே. இந்த பூம்புகார் மண்ணை போலவே வட தமிழ் மண்ணில் ஒரு துறை முகம் நகரம் பிற்காலத்தில் பெருமையோடு விளங்கியதாகவும் அங்கே சிங்கர்கள் என்கிற வணிகர்கள்வாழ்ந்ததாகவும் செய்திகள் உண்டு. அது மல்லை.

தொடரும்

Comments

  1. பேரைப்பார்த்தவுடன் ஷாக்.

    மந்திரி சிதம்பரம் பையனோன்னு? அவர் பெயரும் கார்த்திக் சிதம்பரம்தானே

    ReplyDelete
  2. நெறைய பேருக்கு இந்த குழப்பம் இருக்கு. நான் அவர் இல்லை.

    ReplyDelete
  3. அமாவாசைக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் சரிபார்க்கவும்.

    சமஸ்கிருதத்தில் எதேனும் கிடைக்கலாம் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.