Skip to main content

தமிழ் நாட்டின் தள புராணம் - அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் - கல்லிடைகுரிச்சியின் சகோதர தளம். அம்பாசமுத்திரம் அவளோகதீஸ்வரர் என்கிற இறைவனின் உறைவிடம்.
அவளோகதீஸ்வரர் இந்து கடவுள் இல்லை. அவர் புத்தர்களின் கடவுள். அம்பை என்று அழைக்கப்படும் இந்த ஊரில் உள்ள இந்த கடவுளை பற்றிய
சீன வரலாற்று குறிப்புகளில் உள்ளதாம்.

தாமிரபரணி என்பது தம்மபாணி என்று வட இந்திய புத்த சமயத்தவர்களால் அழைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் கூட ஒரு தம்மபாணி உண்டு என்று கேள்வி. அம்பாசமுத்திரம் பல மன்னர்கள் கை மாறி இருக்கும். புத்த சமயத்தவர்கள் கழுவில் ஏற்ற பட்டு இருக்கலாம்.

விகிரமசிங்கபண்டியன் என்கிற மன்னனின் பெயரில் ஒரு ஊர் அருகமையில் உள்ளது. அகத்தியர் உலகம் சமநிலை பெற இங்குதான் வந்து அமர்ந்தாராம். பாண்டியர்கள் சோழர்கள் என கைமாறிய நகரம் இது. இங்கே சோழர்கள் கட்டிய கோயிலும் உண்டு.

காடையர்கள் என்கிற மக்கள் கூட்டத்தின் ஊரான கடையம் இதன் அருகில் உள்ளது. தமிழ் மண்ணில் பல சமண புத்த தளங்கள் இருந்தன. அவை பின்னர் வரலற்றில் இருந்து அழிக்கப்பட்டன.

அம்பையின் அவளோகதீஸ்வரர் மட்டும் அல்ல - புத்த மத்ததை நிலை நாட்டிய பல சீனா ஜப்பானிய முனிவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்று நம்பபடுகிறது. அமிதாப்பா புத்தர், பொதி தர்மர் போன்றோர் தமிழர்கள் என்பது பலரின் நம்பிக்கை.

அம்பிக்கு போனால் அவளோகதீஸ்வறரை பாருங்கள்.

தொடரும்

Comments

Popular posts from this blog

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.