Skip to main content

தமிழ் நாட்டின் தள புராணம் - அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் - கல்லிடைகுரிச்சியின் சகோதர தளம். அம்பாசமுத்திரம் அவளோகதீஸ்வரர் என்கிற இறைவனின் உறைவிடம்.
அவளோகதீஸ்வரர் இந்து கடவுள் இல்லை. அவர் புத்தர்களின் கடவுள். அம்பை என்று அழைக்கப்படும் இந்த ஊரில் உள்ள இந்த கடவுளை பற்றிய
சீன வரலாற்று குறிப்புகளில் உள்ளதாம்.

தாமிரபரணி என்பது தம்மபாணி என்று வட இந்திய புத்த சமயத்தவர்களால் அழைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் கூட ஒரு தம்மபாணி உண்டு என்று கேள்வி. அம்பாசமுத்திரம் பல மன்னர்கள் கை மாறி இருக்கும். புத்த சமயத்தவர்கள் கழுவில் ஏற்ற பட்டு இருக்கலாம்.

விகிரமசிங்கபண்டியன் என்கிற மன்னனின் பெயரில் ஒரு ஊர் அருகமையில் உள்ளது. அகத்தியர் உலகம் சமநிலை பெற இங்குதான் வந்து அமர்ந்தாராம். பாண்டியர்கள் சோழர்கள் என கைமாறிய நகரம் இது. இங்கே சோழர்கள் கட்டிய கோயிலும் உண்டு.

காடையர்கள் என்கிற மக்கள் கூட்டத்தின் ஊரான கடையம் இதன் அருகில் உள்ளது. தமிழ் மண்ணில் பல சமண புத்த தளங்கள் இருந்தன. அவை பின்னர் வரலற்றில் இருந்து அழிக்கப்பட்டன.

அம்பையின் அவளோகதீஸ்வரர் மட்டும் அல்ல - புத்த மத்ததை நிலை நாட்டிய பல சீனா ஜப்பானிய முனிவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்று நம்பபடுகிறது. அமிதாப்பா புத்தர், பொதி தர்மர் போன்றோர் தமிழர்கள் என்பது பலரின் நம்பிக்கை.

அம்பிக்கு போனால் அவளோகதீஸ்வறரை பாருங்கள்.

தொடரும்

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்