Skip to main content

த நா தல வரலாறு - கம்பன் இறந்த ஊர்

மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிற்றூரின் பெயர் நாடரசன்கோட்டை.
நாடரசன்கோட்டை என்கிற ஊரில் தான் கம்பர் தன் கடைசி நாட்களை கழித்தார்.

சோழ மன்னனிடம் பிணக்கம் ஏற்பட்ட பின்னும் தன் மகனின் மரணத்திற்கு பின்னும் கம்பன் தன் உறவினர்கள் வாழும் ஊரான நாட்டரசன்கோட்டைக்கு வந்தாராம்.

நாடரசன்கோட்டையின் மக்களின் தமிழ் அறிவு கண்டு - தங்கினால் இங்குதான் தங்குவேன் என்று அவர் முடிவு எடுத்ததாகவும் கதை உண்டு.நாட்டரசன்கோட்டை போன்ற இடங்களில் கம்பன் காலத்தில் சோறு விற்கும் பழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் கம்பன் அறிந்தவரையில் சில இடங்களில் அது இருந்திருக்கலாம்.

தன்மான தமிழனாய் விளங்கிய கம்பன் - யாரிடமும் இலவசமாய் உணவு வாங்கி உன்ன மறுத்து நாட்டரசன் கோட்டை வந்த தருணத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் - "எங்கு சோறு விக்கும் ?" -என்று கேட்டாராம்.
"தொண்டயில்தான் விக்கும்" - என்றான் ஒரு சிறுவன் அதற்கு. அன்றில் இருந்து கம்பன் அங்கேயே தங்கி விட்டானாம்.

கம்பனின் உறவினர்கள் நாட்டரசன் கோட்டை வாழும் வணிகர்களிடம் வேலை செய்திருக்க கூடும் எனவே அங்கு அவர் தங்கி வாழ முடிவு செய்திருக்கலாம் என்று செய்திகள் உண்டு.

இன்று கம்பன் நினைவு இடம் கம்பன் கோவில் என்று அழைக்கப்பட்டு பாதுகாக்க படுகிறது. கம்பன் விழாவின் நினைவு நாள் அங்குதான் நடக்கும்.

முடிந்தால் இந்த தமிழ் திருதளதிருக்கு சென்று வாருங்கள். கம்பன் கோவிலுக்கு சென்று வாருங்கள். இன்றும் கம்பன் நினைவு மண்ணை பாலில் கலந்து குடித்தால் அறிவு பெருகும் என்று நம்பிக்கை உள்ளது.

பயணம் செய்ய சிறந்த நாட்கள்: கம்பன் விழா நடைபெறும் நாட்கள்.

கம்பன் புகழ் வாழ்க.

தொடரும்.

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.