Skip to main content

தமிழுக்கு என்று ஒரு ஆண்டு!

இது தமிழ் தல வரலாறு தொடரின் பகுதி இல்லை. இன்று தான் தமிழ் செம்மொழி மாநாட்டின் கரு பாடலை பார்த்தேன். ஏற்கனவே கேட்டிருந்தாலும், இந்த ஒலி-ஒளி வடிவம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் நம்பி பார்த்தேன்.

பாடலை கேட்ட தருணத்தில் நான் ரசித்ததை விட இந்த வடிவில் பார்த்ததும் கேட்டதும் பிடித்திருந்தது. முதலில் இந்த பாடலில் கொஞ்சம் மண் மனம் மங்கி உள்ளது என்கிற கருத்தை புறம் தள்ளி விடமுடியாது என்றாலும் - வடிவமைப்பில்  விளம்பர யுத்தி போலவே தெரிந்தது.

தமிழ் மண்ணின் தமிழரின் பெருமை கொஞ்சம் அந்நிய தாக்கத்துடன் சொல்ல பட்டிருந்தாலும் - ரசிக்க முடிந்தது. என்னை ஈர்த்தது.

விமர்சனங்களுக்கு அப்பால் இந்த முயற்சி பாரட்ட பட வேண்டியதே. தமிழர்கள் இன்றும் ஒற்றுமையாய் இல்லை என்பது வேறு. ஆனால் தமிழ் மொழிக்கான விழா என்கிற போது மகிழ்ச்சி இதயம் நிறைத்தது.

அப்பாவி தமிழன் பல தருணங்களில் அழகிய வார்த்தைக்கும் முகத்துக்கும் மட்டும் அல்ல காசுக்கும்  விலை போகிறான். தமிழனை திசை திருப்ப பல்வேறு வழிகள் கை ஆளப்படுகின்றன.

ஆனால் இது ஒரு திசை திருப்பலான விழா என்று கூறினால் - கடைசியல் தமிழனை திசை திருப்ப தமிழ் மொழி மாநாடு வேண்டி வந்தது என்றால் மகிழ்ச்சியே.

இதை பார்க்கிற போது என் நெஞ்சில் வந்த ஒரு கேள்வி - தமிழ் செம்மொழி இருக்கை ஏறி அமர்ந்துவிட்டாள். அதற்கு பின் நடைபெறும் பெரும் திருவிழா இது.

ஏன் இந்த ஆண்டை தமிழ் ஆண்டாய் மத்திய மாநில அரசுகள் அறிவிக்க கூடாது? இது ஒரு ஆசைதான். வடமொழிக்கு ஒரு முறை ஒரு ஆண்டு அறிவிக்க பட்டது என் நினைவில் உள்ளது.

இப்படி அறிவித்தால் பிற மொழியாளர்களும் கேட்க கூடும் என்று சிலர் சொல்லலாம். அது நல்லதே! இந்திய மண்ணின் மொழிகளை இந்தியாவில்தான் காக்கவேண்டும். மலையாளத்திற்கு ஒரு ஆண்டு மாரத்திக்கு ஒரு ஆண்டு அறிவித்தால் - அந்த ஆண்டில் அந்த மொழி பெருமை பரப்பபட்டால் நாமும் பிற மொழிகளை அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

கன்னடத்திற்கு ஒரு ஆண்டு கோரப்பட்டால் - நான் ஆதரிப்பேன். உங்கள் பதில் யான் அறியேன்.

மொழிகள் மனிதர்களின் பண்பாட்டின் பல்லக்குகள். தமிழ் மொழிக்கும் இந்த ஆண்டை ஏன் அர்பணிக்க கூடாது. இந்த ஆண்டில் தமிழ் மண்ணில் எல்லோரும் தமிழில் கை ஒப்பம் இடுங்கள். தமிழர் உடை அணியுங்கள் பொங்கல் தமிழ் புத்தாண்டு அன்றாவது.


மத்திய அரசு அறிவிக்காவிட்டாலும் தமிழக அரசு அறிவிக்கலாம். அரசுகளால் இயலாமற் போனாலும்  - நாம் ஏதாவது செய்யலாம். என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

என்னை எத்தனை பேர் வழி மொழிகிறீர்கள் ?

வாழிய செந்தமிழ்!

Comments

  1. நல்ல சிந்தனை ..
    நான் வழிமொழிகிறேன் ..

    ReplyDelete
  2. அருமையான யோசனை !! ஆனால் எப்படி செயல்படுத்துவது ??

    ReplyDelete
  3. நன்றி செந்தில். இந்த சிந்தனையை பரப்புங்கள். இதை செயல்படுத்த - முடிந்தால் நண்பர்களிடம் ஆலோசிக்கவும்.நான் இது தொடர்பான சில வழி முறைகளை ஆராயலாம் என்று உள்ளேன்.

    ReplyDelete
  4. பெயர் இன்றி வந்தாலும் ஆதரவு நல்கிய நண்பரே.
    நாம் எல்லோரும் ஏன் ஏடுகளுக்கு - ஆசரியர் கடிதங்களுக்கு எழுதக்கூடாது - இணையத்திலும் அஞ்சலிலும்.

    ReplyDelete
  5. அருமையான யோசனை. வரவேற்கிறேன்! இந்திய ஒற்றுமைக்கு இந்திய மொழிகளின் புரிதல் அவசியம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்