Skip to main content

த நா வரலாறு : மாமல்லபுரத்துக்கு அண்ணன்

குடை வரை கோயில்கள் தமிழ்மண்ணில் உருவாக பெரும் காரணமானவர்களில் ஒருவர் என்று போற்றபடுபவர் மாமல்லன் என்கிற மகேந்திர வர்ம பல்லவன்.

மாமல்லபுரத்தை கட்டுவதற்கு முன் மாமல்லன் கட்டியதாக சொல்லப்படுவது மண்டகப்பட்டு குகை கோயில். மண்டகப்பட்டு என்பது புதுவை அருகே உள்ளது. புதுவையில் இருந்து 50  கி மி தூரம் இருக்கலாம். மண்டகபட்டுதான் தமிழ் மண்ணின் முதல் குடை வரை கலைநகரம் என்று நம்பபடுகிறது. மண்டகப்பட்டு உருவான பிறகே மாமல்லபுரம் கட்ட மகேந்திர வர்மன் நினைத்ததாய் சொல்லபடுகிறது. காலத்தால் முந்தையது மண்டகப்பட்டு.

மாமல்லபுரத்தை அறிந்த அளவு தமிழ் கூறும் நல்லுலகம் மண்டகபட்டை அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறன்.

மண்டகப்பட்டு கோயில் கட்டும் தருணத்தில் தன்னை விசித்திர சித்தன் என்று மகேந்திரவர்மன் அழைத்துகொண்டான் என்கிறார்கள் சிலர். விசித்திர சித்தன் என்றால் விசித்திரமான கலைகள் கற்று அறிந்தவன் என்று பொருள். ( இவர் பதினெட்டு சித்தரில் உள்ளாரா ? ).

மகேந்திரவர்மனுக்கு முன் பல்லவர்கள் கட்டிய கோயில்கள் அழிந்து போய் இருக்கலாம் ( சில ஆவது ). அழிந்து போகும் கல்லாலும் மண்ணாலும் கோயில் கட்டமாட்டேன் என்று முடிவு எடுத்தானாம் பல்லவன் மகேந்திரவர்மன்.

எனவே குடைவரை கோயில்கள் கட்ட தீர்மானிதானாம். அவனுக்கு பின் பாண்டியர்களும் இந்த குகை வடிவத்துக்கு தாவினராம். தமிழ் நாட்டின் முதல் குகை வடிவகலை மண்டகபட்டாக இருக்கும்.

இதன் மூலம் அறியபடுவது என்னவென்றால் தமிழ் மண்ணிலும் கோயில்கள் அழிக்கபட்டு இருக்கலாம். பாமியன் என்று அழைக்கப்படும் ஆப்கானிய மலை பகுதியின் சிற்ப தோற்றங்கள் ப்ரிஹத் புத்த வடிவத்தில் இருந்து பிரஹதீஸ்வரர் ( பெரு மருது உடயார்) ஆலயம் தன் உருவாக்க தாகத்தை பெற்று இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்களாம் ( பிர்ஹத் வடிவங்கள் பெரிய சிற்பங்கள் - பாமியான் சிலை 170  அடி உயிரமாம் - பெரு மருது உடையார் சிற்பமும் மிக பெரியது ).

சென்ற பதிவில் பார்த்த உதய கிரி மற்றும் அஸ்தகிரி வரிசூரில் உள்ளவை. அவையும் குகை கோயில்களே.

தொடரும்

Comments

  1. interesting news again..... :-)

    ReplyDelete
  2. Yes! The Story of TN is interesting :-)

    ReplyDelete
  3. ஆன்பர்ரே,

    பொதிதர்மர் ரீன் வரலாறும், போகார் ரீன் வரலாறும் கிட்ட தட்ட ஒன்றுபோல் உள்ளது . பொதிதர்மர் தமிழகத்தில் இருந்து சீனம் சென்ற துறவி . போகார் சீனத்தில் இருந்து தமிழ்ககம் வந்த சித்தர் . இருவருக்கும் ஒரு சீடர் . வைத்தியம் மற்றும் மாத்த்ின் மீது ஈடுபாடு . ஏன் இருவரும் ஒருவராக இருக்க வாய்ப்புகள் இல்லை ? . எனது கருத்து வளைகளில் கிடைத்த தகவலிஇல் இருந்து மட்டுமே .

    அன்புடன்
    ராஜா கந்தசாமி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்