Skip to main content

புத்தர் தமிழர் சிங்களர் - VI

முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது. 

உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம். 
இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும்.

ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல.

தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது. 

குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை. 

சிங்களம் என்கிற இனம் இந்த தீவை  ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர  முயர்ச்சிப்பத்தின் வெளிப்பாடாக இது அறியப்பட்டாலும். தமிழர் நலன் தமிழ் பிரச்சனைகள் தீர்க்க புத்தர் வந்ததையும் இதுவே பதிகிறது.ஆனால் நேரடியாக இல்லை.

வேடர்கள் என்கிற இனத்தில் பெருமான்மையினர் சிங்கள மொழி கற்றுகொள்வது. தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் சிங்களம் கற்றும் புத்த விகாரைகளில் இருந்தது ஆகியவை - கொஞ்சம் புறம் தள்ளபடுகின்றன. 

வாகு மன்னர்கள் காலத்தில் - தமிழின் அவசியமும் - ஒற்றை மொழி ஆட்சி இயலாக்காரியம் என்பதும் காலம் உணர்த்துகிறது. ஆனாலும் அவர்களுக்கு சோழர்கள் எதிரிகளே.  

சேர மன்னன் செங்குட்டுவனின் அழைப்பை ஏற்று வாகு மன்னர்களில் ஒருவன் ஆனா கயவாகு வந்தார் என்றும் அவர் பத்தினி வழிபாட்டை தீவில் மேற்கொள்வோம் என்று சொன்னதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது.

பராக்கிரம வாகு ( சிங்களர்கள் பாகு என்கிறார்கள் ) வர்த்தகம்  புரிய தமிழர்களை அனுமத்திததும்; சேரர்கள் மற்றும் பாண்டியர்களிடம் வாகுகள் 
நட்பு கொண்டு இருந்ததும் தெரிகிறது.

சிங்களம் பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பெரும்பகுதி அந்த மண்ணின் மைந்தர்களே. சிங்களம் என்கிற கருத்து இயலின் தந்தைகள் தான் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆக இருக்க வேண்டும். 

புத்தம் அறிய சிங்களம் கற்பது தவறில்லை என்கிற நிலைபாட்டை புத்த கோஷர் என்கிற தமிழர் கொண்டு இருந்த்தது தெரிகிறது. சிங்களம் கற்றுக்கொண்ட நிறைய மனித்தர்கள் தமிழர்கள். சிங்களத்தின் அடித்தளத்தில் தமிழ் இருந்தது.
சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கிய தீப வம்சம் - பெரும் வெற்றி பெறவில்லை. அதன் தரம் உயர்த்தப்பட்ட வடிவமாய் வந்தது - மகாவம்சம்.

தீபவம்சம் விட்டதை பிடிப்பது அதன் நோக்கமாய் இருந்தது.மகாவம்சம் ஏன் தேவை பட்டது ? தேடுவோம்.

தொடரும்
 
 

Comments

  1. வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...