Skip to main content

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது. 

தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. 
இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை 
தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. 

புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த
தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது. 

இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு.

நாகர்கள் பற்றி நிறைய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அதிலும் வணிகர்கள் பலர் நாகர்கள். நாகர்கள் என்பவர்கள் பற்றி நானே ஒரு முறை எழுதி உள்ளேன். நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்பவர்கள் என்பது அவர்கள் பற்றி தமிழ் சொல்லும் செய்தி. 

இலங்கையின் இனங்களில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் இவர்கள் ஒரு பிரிவாக மட்டுமே கருதப்பட்டனர். இவர்களின் அடையாளங்கள் தமிழ் நாட்டில் இலக்கியங்களுக்குள் மிகுதியாக நின்றுவிட்டது. இவர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்தினார்களா என்பது ஆய்வுக்கு உரியது. 

புத்தம் - பல புத்தர்களை தமிழர்கள் என்றே விழிப்பதாக கொரிய ஆய்வு என்று சொல்லி உள்ளது. புத்தி தார பல்லவர் ( போதி தர்மர் ) தமிழர்.  அமிதாப்பா புத்தர் கூட தமிழர் என்கிற எண்ணம் உண்டு. பிரசன்னா தாரர் கூட தமிழராய் இருந்து இருக்கலாம். சாக்கிய முனி கௌதம  புத்தர் தமிழ் பேசி இருக்கலாம். ஆய்வு தேவை.

தம்மபாலர்  தமிழர் என்பதும் சிலர் கருத்து. புத்தம் வளர தமிழ் - தமிழர் பெரிதும் உதவி உள்ளனர். வட மொழி வரவு தமிழ் மக்களிடம் இருந்து இந்து மார்கத்தை எப்படி பாதித்தோ அது போலவே தன் வளர் பருவத்தில் பாலி மொழியை தன் உத்தியோக மொழியாக புத்தம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் - சாக்கிய முனி கௌதம புத்தர் பேசிய மொழி அது என்பது. 

சமயம் சார்ந்த மொழிகள் பெரிதும் அழித்தே வந்து உள்ளன. பாலி என்கிற அருமையான மொழியும் அதற்க்கு விதிவிலக்கு இல்லை.

இயேசு எப்படி மக்கள் மொழியில் பேச முற்பட்டரோ அது போலவே அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் மக்கள் மொழியை தேர்ந்தெடுத்தார். 
காளிதாசரின் மேக சந்தேசம் பாலியை மக்கள் மொழி என்றும் வட மொழியை அரசர்கள் அவை மொழி என்றும் சொல்லாமற் சொல்லும். அந்த நூலில் காவலர்கள் பேசும் மொழி பாலியோ பிரகிரதாமோ தவிர வட மொழி இல்லை. 
ஆனால் பாலியும் இன்று நம்மிடம் இல்லை.

தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம். புத்தர் தமிழ் மண்ணில் திருச்சி மற்றும் தஞ்சைக்கு வந்து இருக்கலாம் என்று கருத வாய்ப்பு உண்டு. அவலோக தீசர் என்கிற புத்த மத கடவுள் இன்னும் தமிழ் மண்ணில் உண்டு. அந்த இறைவனின் தளம் அம்பாசமுத்திரம் என்பது இன்றும் வாழும் உண்மை. எனவே புத்தர் இங்கு வந்து இருக்கலாம். 

புத்தரின் தமிழ் மண் பயணம் பற்றிய ஆய்வு நிறைய தெரியாத வரலாற்றை கொண்டு வரலாம். 

வரலாறு எப்போது ஒரு சுகமான பாடம். 

தொடரும் 
 
 

Comments

  1. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக !

    ReplyDelete
  2. தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம்.


    ......சுவாரசியமான புது தகவல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்