தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.
தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.
இலங்கையை பற்றிய வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை
தமிழர்களுக்கு வாய்த்து இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த
தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.
இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு.
நாகர்கள் பற்றி நிறைய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அதிலும் வணிகர்கள் பலர் நாகர்கள். நாகர்கள் என்பவர்கள் பற்றி நானே ஒரு முறை எழுதி உள்ளேன். நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்பவர்கள் என்பது அவர்கள் பற்றி தமிழ் சொல்லும் செய்தி.
இலங்கையின் இனங்களில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் இவர்கள் ஒரு பிரிவாக மட்டுமே கருதப்பட்டனர். இவர்களின் அடையாளங்கள் தமிழ் நாட்டில் இலக்கியங்களுக்குள் மிகுதியாக நின்றுவிட்டது. இவர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்தினார்களா என்பது ஆய்வுக்கு உரியது.
புத்தம் - பல புத்தர்களை தமிழர்கள் என்றே விழிப்பதாக கொரிய ஆய்வு என்று சொல்லி உள்ளது. புத்தி தார பல்லவர் ( போதி தர்மர் ) தமிழர். அமிதாப்பா புத்தர் கூட தமிழர் என்கிற எண்ணம் உண்டு. பிரசன்னா தாரர் கூட தமிழராய் இருந்து இருக்கலாம். சாக்கிய முனி கௌதம புத்தர் தமிழ் பேசி இருக்கலாம். ஆய்வு தேவை.
தம்மபாலர் தமிழர் என்பதும் சிலர் கருத்து. புத்தம் வளர தமிழ் - தமிழர் பெரிதும் உதவி உள்ளனர். வட மொழி வரவு தமிழ் மக்களிடம் இருந்து இந்து மார்கத்தை எப்படி பாதித்தோ அது போலவே தன் வளர் பருவத்தில் பாலி மொழியை தன் உத்தியோக மொழியாக புத்தம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் - சாக்கிய முனி கௌதம புத்தர் பேசிய மொழி அது என்பது.
சமயம் சார்ந்த மொழிகள் பெரிதும் அழித்தே வந்து உள்ளன. பாலி என்கிற அருமையான மொழியும் அதற்க்கு விதிவிலக்கு இல்லை.
இயேசு எப்படி மக்கள் மொழியில் பேச முற்பட்டரோ அது போலவே அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் மக்கள் மொழியை தேர்ந்தெடுத்தார்.
காளிதாசரின் மேக சந்தேசம் பாலியை மக்கள் மொழி என்றும் வட மொழியை அரசர்கள் அவை மொழி என்றும் சொல்லாமற் சொல்லும். அந்த நூலில் காவலர்கள் பேசும் மொழி பாலியோ பிரகிரதாமோ தவிர வட மொழி இல்லை.
ஆனால் பாலியும் இன்று நம்மிடம் இல்லை.
தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம். புத்தர் தமிழ் மண்ணில் திருச்சி மற்றும் தஞ்சைக்கு வந்து இருக்கலாம் என்று கருத வாய்ப்பு உண்டு. அவலோக தீசர் என்கிற புத்த மத கடவுள் இன்னும் தமிழ் மண்ணில் உண்டு. அந்த இறைவனின் தளம் அம்பாசமுத்திரம் என்பது இன்றும் வாழும் உண்மை. எனவே புத்தர் இங்கு வந்து இருக்கலாம்.
புத்தரின் தமிழ் மண் பயணம் பற்றிய ஆய்வு நிறைய தெரியாத வரலாற்றை கொண்டு வரலாம்.
வரலாறு எப்போது ஒரு சுகமான பாடம்.
தொடரும்
ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக !
ReplyDeleteதமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம்.
ReplyDelete......சுவாரசியமான புது தகவல்.