Skip to main content

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - III

ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும்.

வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது.

தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன்  என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள்.

இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு.

கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு.

இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது  வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம்.

வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்களை  நான் பார்த்து உள்ளேன்.

இவர்களில் பெரும் பகுதியினர் சமண அல்லாத புத்தம் சார்ந்தும் இருந்து உள்ளனர். ஒரு நிலையில் சைவர்களாக  மாறி உள்ளனர்.

இவர்களின் பூசை தளங்களில் இந்த தாக்கம்   தெரிகிறது. முதலில் தங்களை பார்த்துக்கொள்வது பின்னரே இறைவனின் படங்களை பார்ப்பது என்பது சைவம் சாராத  இவர்களின் முந்தய மதங்களின் தாக்கமாகவும் இருக்கலாம்.

சாந்தோ சுன்னாம்போ அல்லாமல் வேறு கலவைகள் கொண்டு இவர்கள் கட்டிடம் கட்டிய கலை ஊமைத்துரையின்  கோட்டை கட்டிய முறையோடு கொஞ்சம் ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன்.

இவர்களின் கட்டிட காலையில் மரவேலைப்பாடுகள் அதிகம் பேசப்படுபவை. மரம் என்கிற காரணத்தாலேயே அழிந்து போன பூம்புகார் நகரத்தின் இவர்களின் கட்டிட கலையின் மிககப்பெரிய பகுதி காணாமல்  போய்   இருக்கலாம். இல்லாவிட்டால் இவர்கள் பிற்காலத்தில் மரவேளைப்படுகளுக்கு மாறி இருக்க வேண்டும்.

தொடரும்

Comments

  1. இது போன்ற விசயங்களை குறிப்பு போல் எழுதினால் எந்த வித தாக்கத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் உள்ளூம் புறமும் வெளியே வாருங்களேன்.

    வணிகர் என்றால் பூம்புகார் குறித்து நடந்த வாணிபங்கள் குறித்து கொண்டு செலுத்த முடியும்.

    ராஜராஜ சோழன் கட்டிடக்கலையை கோவிலைப் பற்றி விஸ்தாரமாக எல்லோருமே விவரிக்கிறார்கள். ஆனால் எப்படி சாத்யமானது? அடிப்படை மக்களின் பங்களிப்பு என்ன? போன்ற விசயங்களை முழுமையாக புரிதல்களை தேடிக் கொண்டுருக்கின்றேன்.

    ReplyDelete
  2. நல்ல மொழி நடையில் நகர்த்துகிறீர்கள் நன்றி சகோதரா....

    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  3. நல்லா போகுது உங்கள் வரலாற்றுப் பதிவு... இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  4. இப்போ எங்கள் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகளோடு உயர்ந்த கோபுரங்களோடு ஐரோப்பிய நாடுகளில் உருவாகி வருவது போல !

    ReplyDelete
  5. எளிய நடையில் நன்றாக எழுதி இருக்கிங்க... தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  6. \\ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும்\\

    இதுபோன்ற வணிகர்களைத் தெரிந்துவைத்துள்ளதற்குப் பாராட்டுக்கள்.

    மன்னர்கள் போல் வணிகர்களும் வாழ்ந்தார்கள் என்பதை வணிகத்தின் மூலம் சம்பாதித்த அரண்மனை போன்ற செட்டிநாட்டின் வீடுகளே சாட்சி.

    ஆனால் இதே வணிகநோக்கில் நமது அரசியல் வியாதிகள் இந்தநாட்டைச் சூறையிடும் காட்சியைக் கண்டும் காணாமல் அவர்களின் ஊது குழ்ல்களாக கல்வியாளரும், நீதிமான்களும் மாறி நிற்பதைக் காணும் போது எமதுள்ளம் பூரிப்படைகிறது.!!!!!????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...