Skip to main content

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - II

தமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர்.

கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது  என்று சொல்லப்படுகிறது.

கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை.

கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன.

இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும்  நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன.

உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு.

கோட்டைகள் அழிக்கபடுவது - வீழ்ந்த மன்னனின் உடற் பாகம் தொரனவாயிலில் பத்திக்கபடுவது என்கிற நிகழ்வுகளும் தமிழ் மண்ணில் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

கோயிலுக்கு உரிய மரியாதை கோட்டைகளுக்கு தரப்படவில்லை. அது தரைமட்டம் ஆக்கபடுவது பெருமையாக கருத்தப்பட்டது.  கோயில்களும் நொறுக்கபடுவது  விசித்திர்வர்மனின் காலத்திற்கு  முன் நடந்தே இருந்தது. 

விசிதிரவர்மனின்  முந்தய காலத்தில் கோயில்கள் சாந்து / மண்  கொண்டு கட்டப்பட்டவையாகவும் இருந்து இருக்கலாம்.
கடவுளர்கள் கற்சிலையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பல்லவர்கள் குலத்தில் போகர் வந்திருக்கலாம் என்று அவர் பழங்கால முறையில் அதாவது கல் இல்லாத சிலையாக முருகரை பழனி மலையில் படைத்தார் என்பதும் சிந்திக்க வேண்டியது.

Comments

  1. நல்ல வரலாறு ஒன்றை அறியத் தந்தமைக்கு நன்றி சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  2. கடவுளர்கள் கற்சிலையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பல்லவர்கள் குலத்தில் போகர் வந்திருக்கலாம் என்று அவர் பழங்கால முறையில் அதாவது கல் இல்லாத சிலையாக முருகரை பழனி மலையில் படைத்தார் என்பதும் சிந்திக்க வேண்டியது.


    ...interesting.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு அக்கா...
    நிறைய விஷயங்களை அறிய முடிந்தது.

    ReplyDelete
  4. \\மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு.\\

    முன்தோன்றிமூத்தகுடியாக நாம் இருந்திருக்கும் போது நிச்சயமாக யாது ஊராயிருப்பினும் யாவரும் நமது கேளிர் தவிர வேறில்லை.

    ஆனால் போகர் அவரின் குரு காலாங்கிநாதர் சீனத்தைச் சேர்ந்தவர்கள்.காலாங்கியின் குரு நமது திருமந்திர ஆசான் திருமூலர் என்றும் போகர் 7000 என்ற நூல் கூறுகிறது.

    அவரின் பழனி முருகன் சிலைக்கு,அதன் தொழில் நுட்பம் ”அணுக்கரு” இணைப்பை அடிப்படையாகக் கொண்டது.

    அவ்வளவு முன்னேறிய தொழில்நுட்பம் பழந்தமிழர் சொத்து.ஒரு பதிவே இடும் அளவு நீண்டதாகையால் எனது இடுகையில் விளக்கமாக எழுத விழைகிறேன்.

    தங்களின் பழமை வரலாற்றை மறவா தமிழ் நெஞ்சத்திற்கு எனது வந்தனங்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  5. கார்த்திக்....இருந்திருந்து பதிவு தந்தாலும் சுவாரஸ்யமான பதிவுகள் தாறீங்க !

    ReplyDelete
  6. @வானவன் யோகி - நீங்கள் சொல்லவதில் உள்ள ஒரு கருத்து போதி தர்மரின் வாழ்வோடு ஒத்து இருப்பதாக உணர்கிறேன். இந்த குழப்பத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன். இந்த குழப்பம் உண்மை என்று இருந்தால், பல்லவர்கள் வழி வந்தவராய் போகர் இருக்க வாய்ப்புகள் உண்டு. போதி தர்மரை புத்தி தார பல்லவர் என்று கொரிய திரைப்படம் ஒன்றில் படித்தேன். போதி தர்மரின் வாழ்வுக்கும் போகரின் வாழ்வுக்கும் ஒற்றுமைகள் நிறைய உள்ளன. உங்களை போன்றவர்கள் இதில் நான் தெளிவடைய உதவ முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்