Skip to main content

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார்.

பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன்.

பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள்.

புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர். புத்த மத்ததில் அப்போது கடவுளர் கிடையாது. ஆனாலும் புத்த மதம்  சார்ந்தோர் இந்து மத கடவுளரை வழிபட்டு உள்ளனர். முருகன் அவர்களின் கடவுளர்களில் உண்டு. தற்போது சமண மதம் சார்ந்த என் நண்பர்கள் சிலர் திருமகள் திருநாள் ( தீபாவளி அன்றோ அல்லது முந்தய நாளோ ), அனுமன் பிறந்தநாள் என்று கொண்டாடுகின்றனர். அது போல புத்தம் இருந்து இருக்கலாம்.

பல்லவர்களிடம் வட இந்திய மார்க்க தாக்கங்கள் உண்டு. அவர்கள் மாபாரதத்தை தங்கள் மக்களுக்கு கற்களில் ஆவன படுத்தினர்.  புதுச்சேரிக்கு அருகில்தான் அவர்களின் கற்கோயில் முதலில் கட்டப்பட்டது.

பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் சோழர்கள் வந்தனர். ஆனாலும் அவர்கள் அதை மனம் உடன்படாமலே  ஒத்துக்கொண்டனர். சில தருணங்களில் சோழர்களின் இருப்பை பல்லவர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில்தான் பேரரசர் என்கிறவர்கள் பல்லவர்கள் அவர்களின் பெரும் செயல்கள் போற்றத்தக்கவை என்கிற மன நிலை கொஞ்சம் கொஞ்சமாய் வந்து உள்ளது. பல்லவர்கள் போல் செயல்பட விருப்பம் கொண்டு இருக்கலாம். இதில் முழுமையும் உடன்பட இயலாவிட்டாலும் - பல்லவர்களின் கலையை அதுவும் கற்கோயிலை கடைபிடிக்க பாண்டியர்களும் பல்லவர்களும் விருப்பம் கொண்டு உள்ளனர். சேரர்கள் இந்த தாக்கத்தில் சிக்கி கொள்ளவில்லை.

இப்படிதான் காஞ்சியின் கோயில்களின் தாக்கம் தஞ்சையின் கோயிலில் உள்ளது என்று நினைக்கிறேன்.

பல்லவர் கோயில்கள் இடிக்க முடியாவண்ணம் இருந்தன என்பதை நோக்கும் போது இது ஏன் அரண்மனைகளுக்கு பின்பற்ற  படவில்லை    என்கிற சிந்தனயும் வந்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Comments

  1. Historical Pathivu...
    ariinthukolla vendiya pathivu...
    thodarungal.

    ReplyDelete
  2. புதிய தகவல்கள் கார்த்திக்... தொடருங்கள்

    ReplyDelete
  3. அனுமன் பிறந்தநாள்...புதுத்தகவல் கார்த்திக் !

    ReplyDelete
  4. சுவாரசியமான கேள்வியுடன் முடித்து இருக்கீங்க....சீக்கிரம் தொடருங்க.

    ...Welcome back!

    ReplyDelete
  5. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html

    நன்றி

    ReplyDelete
  6. வித்தியாசமாகத் தான் இருக்கிறத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நன்றி அருண். அறிமுகபடுத்தியமைக்கு.
    நன்றி சே.குமார்
    நன்றி ஹேமா. அமெரிக்காவில் நான் இருந்தபோது சமண நண்பர்கள் கொண்டாடினர்.
    நன்றி சித்ரா
    நன்றி ம.தி.சுதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.