Skip to main content

அரசியல் அவியல் : தன்மானம் காத்த தமிழர்கள்

அரசியல் இப்போதெல்லாம் புரிவதற்கு கடினமாக இல்லை. செய்தியை படிக்கிறவன் அதன் உள்ளர்த்தத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறான்.

மக்கள் தெளிவாகவே உள்ளனர் அனால் தெளிவான முடிவை எடுக்க அவர்களின் நேர்மை தடுக்கிறது. (நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் ஆனால் பணம் வாங்கியாச்சு; கொடுத்த வாக்க காப்பாத்தனும் இல்லையா ?)

தமிழ் நாட்டில் இப்போது குட்டை குழம்பி உள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் முன்னதாக முடிவு செய்து இருந்தால் நிறையவே விளையாடி இருக்கலாம். 
இப்போதும் விளையாடி உள்ளார்கள். 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெரிதாக எதுவும் சாத்தித மாதிரி எனக்கு தென்படவில்லை. தில்லி ஒரு விதிவிலக்கு. 

தற்போதைய ஆட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது மன்மோகன் சிங்கக்கு தெரியும். அவருக்கு அதிகாரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும். 

காங்கிரஸ் உண்மையில் தமிழ் நாட்டில் வளர நினைத்தால் தமிழர்களை பற்றிய சிந்தனை அதிகம் அவர்களிடம் வளர வேண்டும். மக்களாட்சி என்பது என்ன என்பதே தெரியாமல் நம்மில் பலர் உள்ளோம். 

இது தேர்தலை பாதிக்காது என்று ஊழல்கள் பற்றி சொல்லும் போது நாம் ரொம்ப நல்லவர்கள் என்பது தெரிகிறது.

அமெரிக்காவில் ஒரு முதல்வர் ( அந்த ஊரில் ஆளுநர் என்கிறார்கள் ) ஒரு காவல் துறை அதிகாரியிடம் மன்னிப்பு கோரி உள்ளார். 

இது துனைகண்டத்தில் ( இந்தியா, இலங்கை, வாங்க தேசம், பாகிஸ்தான் ) நடக்க வழி இல்லை. நம்முடைய மரபணு அப்படி. பக்கத்தில் ஒரு கூட்டம் முழுமையாக அழிந்தால் கூட நமக்கு தேவை ஆட்சிமாற்றமாக இல்லை. 

கேட்கிற இடங்களை தர கீழே இறங்க தயார் என்கிறது மாநில ஆளும் தரப்பு. வெளியில் வாருங்கள் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்றாலும் நாங்கள் ஆதரவு திரட்டி தருகிறோம் என்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சிக்கு அம்மா பேட்டி தரலாம். ஆக தமிழ்நாட்டின் இரு கட்சிகளும் தன்மானத்துடன் தமிழனை காக்கும் தமிழர்களாக உள்ளனர். 

(படம் - இப்போது உயிரோடு இல்லாத ஒரு கட்சியின்  நேற்றைய விளம்பரம். இந்த கட்சியை பற்றி பின்னூட்டமிடுங்கள் )

Comments

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்