Skip to main content

புத்தர் தமிழர் சிங்களர் IV

காஞ்சி புத்தத்தின்  தலை நகரை இருந்த நாட்கள் இன்னும் எச்சங்களாய் உள்ளது.

இன்றும் காஞ்சிக்கு அருகில் இருக்கும் திருத்தலங்கள் சிலவற்றில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்க படுகிறது. 

அது ஆலயங்களில் பலி கொடுக்காமை. இந்த ஆலயங்கள் இந்து ஆலயங்களை இருந்தாலும் இவை காலத்தால் முந்தய புத்த ஆலயங்களே என்று சொல்கிறார்கள்.

அசோகர் காஞ்சியில் புத்த அடையாளங்கள் நிறுவி இருக்கலாம். 

நாகர்களுக்கும் புத்ததிர்க்கும் இருக்கும் தொடர்பு. தமிழுக்கும் புத்ததிருக்குமான தொடர்பை நிறையவே சொல்லும். புத்தர் மூன்று முறை  இலங்கை வந்ததாகவும் அதில் இரண்டு முறை நாகர்களின் நலனுக்கே வந்ததாகவும் இலங்கையின் வரலாறு பதிகிறது.

புத்தர் நாகர்களில் ( தமிழர்களில் ) பிரச்சனையில் ஈடுபட்ட இரண்டு தரப்பை அவர் அழைத்த தருணத்திலேயே அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டனர் .

இயக்கர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை. அவர்களின் பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வு வழங்கி உள்ளார். 
இலங்கையை புத்தர் மூன்று முறை இலங்கை வந்து இருந்தால் அவர் தமிழ் மண்ணின் வழியாகவே பயணித்து இருக்க வேண்டும்.

புத்தர் எந்த நிலையிலும் வின் வழி பயணம் மேற்கொண்டதில்லை என்றே நம்ப படுகிறது. இதில் சிங்கள வரலாறுகள் மாறுபாடு கின்றன. 

சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் தமிழ் உள்ளது. தமிழர்களில் ஒருவரான புத்த கோஷர் போன்றவர்கள் சிங்கள மொழிக்கு நிறைய வழங்கி இருக்க கூடும்.

சிங்களர்கள் யார் என்பது மகாவம்சத்தை தாண்டி சிந்திக்க வேண்டிய ஒன்று. அதையும் பார்ப்போம்.

தொடரும்.

Comments

  1. அப்போ புத்தர் தமிழரா !

    ReplyDelete
  2. நிச்சியமாக இல்லை. ஆனால் அவர் தமிழ் பேசி இருக்க வாய்ப்பு உண்டு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.