காஞ்சி புத்தத்தின் தலை நகரை இருந்த நாட்கள் இன்னும் எச்சங்களாய் உள்ளது.
இன்றும் காஞ்சிக்கு அருகில் இருக்கும் திருத்தலங்கள் சிலவற்றில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்க படுகிறது.
அது ஆலயங்களில் பலி கொடுக்காமை. இந்த ஆலயங்கள் இந்து ஆலயங்களை இருந்தாலும் இவை காலத்தால் முந்தய புத்த ஆலயங்களே என்று சொல்கிறார்கள்.
அசோகர் காஞ்சியில் புத்த அடையாளங்கள் நிறுவி இருக்கலாம்.
நாகர்களுக்கும் புத்ததிர்க்கும் இருக்கும் தொடர்பு. தமிழுக்கும் புத்ததிருக்குமான தொடர்பை நிறையவே சொல்லும். புத்தர் மூன்று முறை இலங்கை வந்ததாகவும் அதில் இரண்டு முறை நாகர்களின் நலனுக்கே வந்ததாகவும் இலங்கையின் வரலாறு பதிகிறது.
புத்தர் நாகர்களில் ( தமிழர்களில் ) பிரச்சனையில் ஈடுபட்ட இரண்டு தரப்பை அவர் அழைத்த தருணத்திலேயே அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டனர் .
இயக்கர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை. அவர்களின் பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வு வழங்கி உள்ளார்.
இலங்கையை புத்தர் மூன்று முறை இலங்கை வந்து இருந்தால் அவர் தமிழ் மண்ணின் வழியாகவே பயணித்து இருக்க வேண்டும்.
புத்தர் எந்த நிலையிலும் வின் வழி பயணம் மேற்கொண்டதில்லை என்றே நம்ப படுகிறது. இதில் சிங்கள வரலாறுகள் மாறுபாடு கின்றன.
சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் தமிழ் உள்ளது. தமிழர்களில் ஒருவரான புத்த கோஷர் போன்றவர்கள் சிங்கள மொழிக்கு நிறைய வழங்கி இருக்க கூடும்.
சிங்களர்கள் யார் என்பது மகாவம்சத்தை தாண்டி சிந்திக்க வேண்டிய ஒன்று. அதையும் பார்ப்போம்.
தொடரும்.
அப்போ புத்தர் தமிழரா !
ReplyDeleteநிச்சியமாக இல்லை. ஆனால் அவர் தமிழ் பேசி இருக்க வாய்ப்பு உண்டு.
ReplyDelete