Skip to main content

மீண்டும் நான்

இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன்.

இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன.

மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன்.

அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே.

எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே.

வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக.

எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?

Comments

  1. வருக.வணக்கம். நலமா?

    ReplyDelete
  2. மீண்டும் வந்ததற்க்கு வணக்கங்கள். அடுத்த பதிவு எப்போ?

    ReplyDelete
  3. எல்லாம் வழக்கம் போல....
    நீங்கள் எழுதுங்கள் வழக்கம் போல.
    மதுரையா நீங்க....?

    ReplyDelete
  4. வாங்க கார்த்திக்.சுகம்தானே !

    ReplyDelete
  5. Welcome back!!!

    உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம், வழக்கம் போலவே......

    ReplyDelete
  6. நன்றி ஜோதிஜி. நலம். நீங்களும் நலம் என நம்புகிறேன்.
    நன்றி அருண் பிரசாத். மிக விரைவில்

    நன்றி கலாநேசன்
    நன்றி சே.குமார். அமாம் நான் மதுரை - நீங்களுமா ?
    நன்றி கே.ஆர்.பி.செந்தில்
    நன்றி ராம்ஜி_யாஹூ
    நன்றி ஹேமா. நான் நலம். நீங்கள்?
    நன்றி சித்ரா. வழக்கம் போல எழுத ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்