Skip to main content

இந்தியாவிற்கான பயணம்

எதிர்பார்த்து கேட்ட ஒன்று. கடைசியில் அமெரிக்க அரசாங்கத்தின் கருணையால் நடந்து விட்டது ( விசா முடிஞ்சுருசுல ).

இந்த முறை விசா நீடிப்போ, மீண்டும் விண்ணப்பிக்கும் என்னமோ இல்லை என்று சொன்னபோது மேலாளர் ஒரு மாதிரி பார்த்தார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் - நான் ரசித்த மண் அமெரிக்கா. நீங்களும் வாருங்கள் எங்கள் ரத்த கொடை நாளுக்கு. தொடர் நடை பயணத்திற்கு என்று தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மனிதர்கள்.

ஏதாவது தவறாக செய்தால் அறைக்கு அழைத்து - நீ ஏன் இப்படி முயற்ச்சிக்க கூடாது. என்று எடுத்து சொன்ன வெள்ளைக்கார மேலாளர்.அவர் ஒரு இஸ்ரேலியர். நல்லது செய்தால் ஊரையே கூட்டி பாராட்டும் நல்ல மனிதர்.
அமெரிக்கர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டேன். அவர்களின் தேவைகள், சிந்திக்கும் தன்மை எல்லாம் வேறுபட்டதாக இருந்தது. காரணம் அவர்கள் வளர்க்கப்பட்ட முறை.

திருமணத்திற்கு பின்னும் பெற்றோருடன் வாழ்வீர்களா ? எப்படி இது என்று கேட்ட ஆப்பிரிக்க அமேரிக்க நண்பர்.மீண்டும் வா ... என்று தன் தனிப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்புகளை தந்து உச்சி முகந்து அனுப்பிய சீனர்.எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்த கிரேக்கர்.கை குலுக்கி விட்டு நிறுவனம் மாறினாலும் தொடர்பில் இருக்கும் ஐரிஷ்க்காரர்.  இந்தியர்கள் என் நண்பர்கள் என்று சொல்லும் போலிஷ்காரர் ( போலந்தை சேர்ந்தவர்).
சிங்கை வழியாக பயணம் மேற்க்கொள்ள சொன்ன மலையாள நண்பர்.அமெரிக்கா திகட்டவில்லை. வேறு நாடு பயணிப்பேன் அடுத்த முறை என்ற போது - ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை விளக்கி அந்த நாடுகளுக்கு செல்ல சொன்ன ஜேர்மன் காரர்.
அமெரிக்க கடற்படையில் பணியாற்றிவிட்டு இன்று நான் வேலை பார்க்கும் கட்டடத்தில் பணியாற்றும் அந்த மனிதர்  நிறைய முறை என்னிடம் இந்திய வரலாற்றை கேட்ப்பார்.

நீ நன்றாக படம் வரைகிறாய் - ஏன் நீ ஊடக தொழிலுக்கு செல்லக்கூடாது ? என்று கேட்ட கிரேக்கர்.நீ ஆய்வுத்துறைக்கு செல் - என்று சொன்ன வெள்ளை நண்பர்.  ( யாரும் நீ தகவல் தொழில்நுட்பத்தில் இரு என்று சொல்லவில்லை :((()

இனிதே ஆரம்பம் ஆகிறது என் இந்திய பயணம் 10 ஆம் நாள் அதிகாலை சிங்கை வழியாக மதுரை பயணம்.மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் வருவேன். மீண்டும் சென்னையில் வாழலாம்.

பதிவெழுத நேரம் கிட்டுமா என்பது மட்டுமே தெரியவில்லை. கிட்டும் என்று நம்புகிறேன். உலக தலைவர்கள் படுகொலை தொடரை இயன்றவரை எழுதி முடிக்க முயல்வேன்.

சென்ற பதிவில் அருண் பிரசாத் கொலைக்கான காரணங்களை கேட்டார். வரும் பதிவுகளில் தெரிந்த காரணங்களை எழுத முயற்சிக்கிறேன்.
நாளையும் நாளை மறுநாளும் பதிவு எழுத முயற்சிக்கிறேன்.

Comments

  1. வாழ்த்துக்கள் கார்த்திக்.

    எந்நாடு என்றாலும் நம்மூரை போலாகுமா?

    எங்கு சென்றாலும் பதிவுலகத்தையும், எங்களை போன்ற நண்பர்களையும் மறந்துடாதிங்க.

    கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுவீங்கனு நம்புறேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கார்த்திக்.
    கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete
  3. நன்றி அருண் பிரசாத். நானும் அவ்வாறே நம்புகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி கலாநேசன்

    ReplyDelete
  5. சகல நாட்டவரையும் கவர்ந்தவறாக இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கார்த்திக்.
    தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete
  7. ஹ்ம்ம்... அமெரிக்கா-வில் உங்கள் அனுபவம் குறிப்பிட்டது அருமை..
    தொடர்ந்து எழுதுங்கள்...கார்த்திக்..!
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நன்றி
    @தமிழ் உதயம்
    @சே.குமார்
    @ராம்ஜி_யாஹூ
    @Ananthi

    ReplyDelete
  9. Neatly written article :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்