Skip to main content

சிந்தனையில் மூழ்கிய தேவதை ( சிறுகதை )

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கதை. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
******************
அது ஒரு இருள் பொழுது. அந்த இருள் தேசத்திற்குள் வந்து குத்திதாள் அந்த வெள்ளை உடை தேவதை.

இளம்பெண் அவள். புன்னகை பூத்தாள்.

"உன் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது"

தன் கையில் இருந்த மந்திரக்கோலால் இருளில் ஆசிர்வதித்தாள். அங்கே ஒரு மனித உருவும் மண்டியிட்ட நிலையில் உயிர் பெற்றது.
"நன்றி" - மௌனத்தில் சொன்னான்.

அது ஒரு அதிகாலை வேலை.வரண்ட பூமி.
வந்து விழுந்தான் அவன்.

வரப்பில் ஒருவர் படுத்து இருந்தார். பக்கத்தில் எலிக்கறி.
அவரை எழுப்பினான்.

"காய் ..." - தன மொழியில்  வந்து விழுந்த மனிதன் ஆரம்பித்தான்.
"அட! காயாவது பழமாவது? சொத்துக்கு வழி இல்லாம செத்துக்குட்டு இருக்கோம்"  - வரப்பு மனிதன் மீண்டும் களைப்பில் படுத்தான்.

வானத்தில் இருந்து வந்தவன் கொஞ்ச தூரம் நடந்தான்.
பெட்டி கடைகளில் செய்தி ஏடுகள் தொங்கி கொண்டு இருந்தன. குஜராத்தில் சமயக்கலவரம்.

நடந்தான். இன்னும் சாதியும் மதமும் ... கண்டு நகர்ந்தான்.
பக்கத்து நாட்டில் படுகொலைகள் மறைமுகமாய் இந்திய மண் உதவி ? கேள்வி குறிகளோடு அடி அளந்தான்.

நிமிர்ந்து பார்த்தான். உச்சி வெயில்.
தண்ணீர் தவித்தது.

பெட்டி கடைக்கு போனான்.
தண்ணீர் என்று மௌனத்தில் கேட்டான்.
ஒரு பாலித்தின் பையுக்குள் அடைக்கப்பட்ட நீர்.

குடித்து முடித்தான்.
காசு கேட்டான் கடைக்காரன். வந்தவனுக்கு புரியவில்லை. தண்ணீரை விற்கிறார்கள் ? ஆச்சிரியத்துடன் நடந்தான்.
கடைக்காரன் விட்டான் தொலைகிறது என்று.

மெல்லமாய் கல்வி வர்த்தகம் கடை பரப்பி உள்ளதை ஊருக்கு வெளியே இருந்த கல்லூரி சாலைகள் காட்டின.

நூலகங்களில் கூட்டம் இல்லை. திரை அரங்குகளில் அலை மோதியது.
ஒரு கல்லில் அமர்ந்தான். ஊர் பரபரப்பை ஓடிக்கொண்டு இருந்தது.

தான் என்ன தவறு செய்த்தோம்? மனது அவனிடம் கேட்டது.
காந்தி அடிப்படை கல்வி கோரினார். இங்கே கல்வி வர்த்தகம்.
நீருக்கு விலை. உயிரோ மலினம். சாதியையும் மதமும் இன்னும் விசமாய் மனிதனை பிரிக்கிறது. காந்தி ஒருங்கிணைந்த இந்தியா கேட்டார்.
இங்கே ?. வேளாண்மை வேகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வாழ்கிறது. குழம்பிப்போய் பார்த்தால் - நாங்கள் அடுத்த வல்லரசு என்று முழக்கங்கள்.

பார்க்கவே பிடிக்கவில்லை ஆனால் ஒரு நிம்மதி. வந்த இடத்திற்கே போய் விட நினைத்தான்.

இருளின் தேசத்தில் மீண்டும் அவன். எதிர்பார்த்து காத்திருந்த தேவதை.
"நன்றா ?" - தேவதை கேட்டாள்
"நிம்மதி அடைகிறேன்" - அவன் சொன்னான்.
"என்ன சொல்கிறாய் ?"
"நான் என்ன தவறு செய்தேன்?"
"கோட்சே " - கோபப்பட்டாள் தேவதை.
"இந்த மன்னிர்க்குதான் விடுதலை வாங்கித்தர நினைத்தார அந்த மனிதர். காந்தி தேசம் ... இப்போது ஒரு குப்பை கூடம்.
வெள்ளையன் போனனான் கொள்ளையன் வந்தான் என்பது தான் கதை. நல்லவேளை காந்தியை கொன்று நான் காப்பாற்றினேன்."

தேவதை சிந்தனையில் மூழ்கினாள். கோட்சே மீண்டும்  உருவம் இழந்தான் இருளில் கலந்தான்.

Comments

  1. மனிதனை மனிதன் மதிப்பது,மனித நேயம் மறந்து மறைந்து போய்க்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் காந்தி இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.சொன்ன விதம் வித்தியாசமாய் நல்லாயிருக்கு கார்த்திக்.

    ReplyDelete
  2. அது சரி,
    வித்தியாசமான சிந்தனை...
    நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  3. அருமைங்க. முடிவு எதிர்பார்க்காதது

    ReplyDelete
  4. மிக நல்ல கதை.. நல்ல முடிவு.. ஆனால் எழுதிய விதம் தான் ஏதோ உறுத்தலை தந்தது. ஏதோ திரைக்கதை வடிவம் போல் ‘கட்’ ஷாட்டாக இருந்தது. நடை எளிமையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்