Skip to main content

பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்

பள்ளி செல்லும் சிறுவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினார். நண்பன்  கேலி பேசினான். நடத்துனர் கடினமாக பேசினார் - என்று காரணங்கள் பல.

நடத்துனர்கள் மாணவர்களை சரியாக நடுத்துவது இல்லை என்று சிலர் என்னிடம் பேசும்போது சொல்லினர். அவர்கள் சொல்வது உண்மையோ என்று நினைக்கிற சம்பவங்களை நானும் நேரில் பார்த்தேன். இது வருத்தம் அளிக்கிறது.

ஆசிரியர்கள் அடிப்பது எல்லாம் இப்போது குறைந்தே உள்ளது என்று நம்புகிறேன். ஆசிரியர் திட்டினார் என்கிற காரணத்தால் தற்கொலை என்பது சரியான ஒன்றா - ஆசிரியர்கள் சிலரை மிக மோசமான தண்டனைக்கு உள்ளாக்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு தவறு. ஆனால் அவர் கடிந்து கொள்ளக்கூட கூடாதா என்பது விவாத பொருள். மண்டியிட்ட நாட்கள் எனக்கு நினைவில் இன்றும் உண்டு.

நண்பர்கள் கேலி பேசினர். இது மிகவும் வருத்தம் தரும் விடயம். நண்பனே எதிரி ஆவது - நல்லது அல்ல. சக மாணவன் அல்லது மாணவன் என்றே அவர்களை அழைக்க வேண்டும் - அவர்கள் நண்பர்கள் அல்ல.

இன்னும் ராகிங் கொடுமை இருக்கிறது - அதுவும் அண்ணா பல்கலையில் கூட என்கிற செய்திகள் வருத்தம் அளிக்கிறது.

எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம். மொஹெஞ்சதரோ நிலத்திற்கு அந்நிய படைகள் வந்தபோது - போருக்கு ஆயத்தம் அற்ற நிலையில் இருந்த ஒரு பண்பு உயர் கூட்டம் என்றே திராவிட மக்கள் வர்ணிக்கப்படுகின்றனர்.

மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும்.

Comments

  1. கார்த்திக்...நீங்கள் சொன்ன கடைசி வரி உண்மை.வாழ்வை எதிர்க்கும் சமாளிக்கும் அல்லது எதிர்பார்க்கும் மனநிலை இருந்துவிட்டால் இப்படியான சம்பவங்களுக்கு வாய்ப்பில்லை.

    ReplyDelete
  2. மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும். ///

    புற அழகிற்கு காட்டும் அக்கறையை, மனம் வலிமையடைய காட்ட வேண்டும். குறைகளை கண்டு பிடித்து தீர்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம்.


    ......ஒருவரின் பேச்சு, ஒருவரை மேன்பட வைக்க வேண்டுமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் விதமாக அல்ல. உறுதியான மனநிலை பெறுவது, ஒருவரின் தனிப்பட்ட personality யா? இல்லை, வளர்ப்பு மூலம் - பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்லி கொடுத்து - வருவதா என்று தெரியவில்லை. நல்ல இடுகை.

    ReplyDelete
  4. நன்றி சோதரா,...

    ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற மனநிலையில் மட்டுமல்ல,வேதமாகவே கைக்கொண்டிருந்துள்ளனர் நமது மூதாதைகள்.

    ஆனால் நமது மக்கள் போதிய மனோவலிமை பெற்றிருக்கவில்லையெனவே எனக்குத் தோன்றுகிறது.

    ஏனெனில் ஆரியக்கலப்புக்கு முன்போ,பிறகோ,ஒன்றல்ல,....ஓராயிரமல்ல,...
    முப்பத்து முக்கோடி தேவர்கள்(90கோடி) முதல் இன்றைய இந்திய மக்கள் தொகை அளவில் தெய்வங்களை வைத்து இவர்களெல்லாம் உன்னைக் காப்பாற்ற உள்ளபோது எதற்கு பயம் என்று அவர்களுக்கு ஒரு மனோவலிமை உண்டாக்கப் புணையப்பட்ட பொய்களோ..!!?? என்ற ஒரு குழப்பம் எனக்கும் உண்டு.

    உலகெங்கும் சென்றும் இன்னும் ஆங்கிலேயர்கள் பெற்ற வலிமை போன்று நாம் இன்னும் பெறவில்லை என்பது கண்கூடு.....

    பல ஆலோசனைக்காரருள்ளவனை அழிக்கமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டால் இது போன்ற தவறான செயல்கள் நடக்காது.

    வாழ்த்துக்கள்..வாழ்க...வளர்க..

    ReplyDelete
  5. நான் சகோதரி ஹேமாவின் கருத்தையே Repeatuகிறேன்.

    ReplyDelete
  6. நன்றி ஹேமா
    நன்றி தமிழ் உதயம்
    நன்றி Chitra
    நன்றி வானவன் யோகி
    நன்றி சே.குமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்