Skip to main content

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார்.

பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன்.

பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள்.

புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர். புத்த மத்ததில் அப்போது கடவுளர் கிடையாது. ஆனாலும் புத்த மதம்  சார்ந்தோர் இந்து மத கடவுளரை வழிபட்டு உள்ளனர். முருகன் அவர்களின் கடவுளர்களில் உண்டு. தற்போது சமண மதம் சார்ந்த என் நண்பர்கள் சிலர் திருமகள் திருநாள் ( தீபாவளி அன்றோ அல்லது முந்தய நாளோ ), அனுமன் பிறந்தநாள் என்று கொண்டாடுகின்றனர். அது போல புத்தம் இருந்து இருக்கலாம்.

பல்லவர்களிடம் வட இந்திய மார்க்க தாக்கங்கள் உண்டு. அவர்கள் மாபாரதத்தை தங்கள் மக்களுக்கு கற்களில் ஆவன படுத்தினர்.  புதுச்சேரிக்கு அருகில்தான் அவர்களின் கற்கோயில் முதலில் கட்டப்பட்டது.

பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் சோழர்கள் வந்தனர். ஆனாலும் அவர்கள் அதை மனம் உடன்படாமலே  ஒத்துக்கொண்டனர். சில தருணங்களில் சோழர்களின் இருப்பை பல்லவர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில்தான் பேரரசர் என்கிறவர்கள் பல்லவர்கள் அவர்களின் பெரும் செயல்கள் போற்றத்தக்கவை என்கிற மன நிலை கொஞ்சம் கொஞ்சமாய் வந்து உள்ளது. பல்லவர்கள் போல் செயல்பட விருப்பம் கொண்டு இருக்கலாம். இதில் முழுமையும் உடன்பட இயலாவிட்டாலும் - பல்லவர்களின் கலையை அதுவும் கற்கோயிலை கடைபிடிக்க பாண்டியர்களும் பல்லவர்களும் விருப்பம் கொண்டு உள்ளனர். சேரர்கள் இந்த தாக்கத்தில் சிக்கி கொள்ளவில்லை.

இப்படிதான் காஞ்சியின் கோயில்களின் தாக்கம் தஞ்சையின் கோயிலில் உள்ளது என்று நினைக்கிறேன்.

பல்லவர் கோயில்கள் இடிக்க முடியாவண்ணம் இருந்தன என்பதை நோக்கும் போது இது ஏன் அரண்மனைகளுக்கு பின்பற்ற  படவில்லை    என்கிற சிந்தனயும் வந்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Comments

  1. Historical Pathivu...
    ariinthukolla vendiya pathivu...
    thodarungal.

    ReplyDelete
  2. புதிய தகவல்கள் கார்த்திக்... தொடருங்கள்

    ReplyDelete
  3. அனுமன் பிறந்தநாள்...புதுத்தகவல் கார்த்திக் !

    ReplyDelete
  4. சுவாரசியமான கேள்வியுடன் முடித்து இருக்கீங்க....சீக்கிரம் தொடருங்க.

    ...Welcome back!

    ReplyDelete
  5. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html

    நன்றி

    ReplyDelete
  6. வித்தியாசமாகத் தான் இருக்கிறத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நன்றி அருண். அறிமுகபடுத்தியமைக்கு.
    நன்றி சே.குமார்
    நன்றி ஹேமா. அமெரிக்காவில் நான் இருந்தபோது சமண நண்பர்கள் கொண்டாடினர்.
    நன்றி சித்ரா
    நன்றி ம.தி.சுதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்